பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

By KU BUREAU

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பொய்யாதநல்லூரைச் சேர்ந்தவர் ஜமால் முகமது. இவர், தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரி வருவாய்த் துறை அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கடவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார்(32) கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜமால் முகமது, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். பின்னர், போலீஸார் ஏற்பாட்டின்படி, மீமிசலில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ஜமால் முகமது நேற்று கொடுத்துள்ளார். அதை சதீஸ்குமார் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான போலீஸார் அவரைக் கைது செய்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE