தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

By KU BUREAU

புதுடெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: “தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.

வரும் 24-ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22, 23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை 23 ஆம் தேதிக்குப் பின்னர் மழைப் படிப்படியாகக் குறையும் என்றும், வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.

வாடும் வட இந்தியா: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பரவலாக தென் மாநிலங்களில் மழை பெய்துவரும் சூழலில் வட மாநிலங்கள் தொடர்ந்து கடும் வெப்பத்தால் வாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE