கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குள் மோதல்: போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ராஜ்குமார் என்ற கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரவி என்பவர் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு (ஆக.19) இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சிறை அதிகாரிகள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அருகில் இருந்த சுவற்றில் மோதிக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடலூர் மத்திய சிறை அதிகாரி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE