பவுனுக்கு ரூ.840 உயர்வு: ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

By KU BUREAU

சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. ஒரே நாளில்தங்கம் பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.53,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ஏற தொடங்கியுள்ளதை கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி உள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.6,670-க்கும்,பவுனுக்கு ரூ.840 அதிகரித்துரூ.53,360-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட்சுத்தத் தங்கத்தின் விலை சவரன்ரூ.57,000-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.91-க்குவிற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.91,000 ஆக உள்ளது. கடந்த சில நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்திருப்பதைக் கண்டு நகை வாங்குபவர்கள் கவலை அடைந்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE