“அதிமுக செயற்குழு ஏன் கூடியது என்பதை கூட்டியவர்களிடம் தான் கேட்கவேண்டும்” - ஓபிஎஸ் கிண்டல்

By என்.சன்னாசி

மதுரை: “அதிமுகவின் அவசர செயற்குழுவை எதற்காக கூட்டினார்கள் என்று செயற்குழுவை கூட்டியவர்களிடம் தான் கேட்கவேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கையாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, அந்தந்த மாநில அரசுகள் உரிய முயற்சி எடுக்கவேண்டும்.

அதிமுகவின் அவசர செயற்குழுவை எதற்காக கூட்டினர், என்ன நோக்கத்திற்காக கூடியது என்பதை கூட்டியவர்களிடம் தான் கேட்கவேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே 5 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ராஜாஜி அளவுக்கு ஞாபகசக்தி உள்ளவர் என, முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகிறார். இது குறித்து கேள்வி கேட்கும்போதே உங்களுக்கு சிரிப்பு வருகிறது. எனக்கும் சிரிப்புத் தான் வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE