சென்னையை குளிர்வித்த மழை

By KU BUREAU

சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்ப அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் கடும் புழுக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன்படி, எழும்பூர், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலையும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு மேலாக ராயப்பேட்டை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், பாரிமுனை, வேளச்சேரி, ஆலந்தூர், கிண்டி, அம்பத்தூர் என பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வந்த பொதுமக்கள், நேற்று பெய்த மழை காரணமான ஏற்பட்ட குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE