டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதி

By KU BUREAU

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கியபதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தகட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்கு 644 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE