இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி: தேவநேயப் பாவாணர் மணி மண்டப காப்பாளராக கொள்ளுப்பேத்தி நியமனம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, மதுரை தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தின் காப்பாளராக அவரது கொள்ளுப்பேத்தி மனோசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, மதுரைகே.கே.நகரில் உருவச் சிலையுடன்கூடிய மணிமண்டபம் அமைத்து,2007 நவ. 30-ம் தேதி திறந்துவைத்தார்.

மேலும், அந்த மணி மண்டபத்துக்கு தேவநேயப் பாவாணரின் வாரிசுதாரரான அவரது பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்தை, செய்திமக்கள் தொடர்புத் துறை மூலம்காப்பாளராக (அலுவலக உதவியாளர்) நியமனம் செய்தார்.

மேலும், பாவாணரின் நூல்களை அரசு உடைமையாக்கி, அவரது மரபுரிமையருக்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகை வழங்கிச் சிறப்பித்தார். மணிமண்டபத்தைச் சிறப்பாகப் பராமரித்து வந்த ஏ.எம்,டி.பரிபூரணம், கடந்த 2022-ம்ஆண்டு உடல்நலக் குறைவால்மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் காப்பாளர் இல்லாமல்,மணிமண்டபத்தைச் சுற்றி முட்புதர்களும், குப்பையும் நிறைந்து காணப்பட்டன.

அதனால், ஏ.எம்.டி.பரிபூரணத்தின் மகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கொள்ளுப் பேத்தியுமான க.மனோசாந்தி, கருணை அடிப்படையில், தனது தாய் பார்த்த அந்தப் பணியை தனக்கு வழங்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு செய்தி-மக்கள் தொடர்புத் துறை வாயிலாக விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு உடனடியாகப் பணி வழங்கப்படவில்லை. அவரது 2 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.

அதனடிப்படையில் தேவநேயப்பாவாணரின் கொள்ளுப் பேத்தி க.மனோசாந்தியின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்தமுதல்வர் ஸ்டாலின்,அவருக்கு தேவநேயப்பாவாணர் மணிமண்டபத்தில் காலியாக உள்ளகாப்பாளர் (அலுவலகஉதவியாளர்) பணி ஆணையைகருணை அடிப்படையில் வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பணி நியமன ஆணையை மனோசாந்திக்கு வழங்கினார். பணி ஆணையைப் பெற்றுக்கொண்ட அவர், அதற்காகதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,செய்தி-மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE