பெண் மருத்துவர் கொலை வழக்கு: அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By பெ.பாரதி

அரியலூர்: பெண் மருத்துவர் கொலை வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று தங்களது வகுப்புகளைப் புறக்கணித்து (ஆக.16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவம் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE