புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு: முதல்வர் ரங்கசாமி உறுதி

By KU BUREAU

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்துப் பேசியதாவது:"புதுவையில் திருநங்கைகளுக்கான நல வாரியம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை, அவர்களின் வயதுக்கு ஏற்ப ரூ.4,000 மற்றும் ரூ.5,000-ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE