ரவுடிகளின் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்படும்: தென்காசி புதிய எஸ்.பி சீனிவாசன் உறுதி

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டி.பி.சுரேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்.

இதனிடையே, தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் பேசிய எஸ்.பி சீனிவாசன், "தென்காசி மாவட்டத்தில் சாதி, மத மோதல்கள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்படும். போதைப் பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது குறைகள் தீர்க்கப்படும். குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு 98840 42100 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்" என்று எஸ்.பி சீனிவாசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE