மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட மதிமுக அவைத் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மேலும், உயர்நிலைக் குழு உறுப்பினர் என.செல்வராகவன் பேசினார். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரியும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதையும், நிரந்தர தீர்வு காணாமல் இருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம், ஒன்றியம், நகர மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE