மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது - காரைக்குடியில் மதிமுக ஆர்ப்பாட்டம்

By இ.ஜெகநாதன்

காரைக்குடி: மத்திய பட்ஜெட்டில தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிவகங்கை மாவட்டம் ஐந்து விளக்கில் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட மதிமுகவினர், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரணத் தொகையை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE