பரந்தூர் விமான நிலையத்துக்கு வட்டாட்சியர் நியமனம் எதிர்த்து துணை வட்டாட்சியர்கள் தர்ணா

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு ஏற்கெனவே நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த இடங்களில் வட்டாட்சியர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

ஏற்கெனவே துணை வட்டாட்சியர்களாக இருந்த வட்டாட்சியர்களாக பதவி உயர்வுபெற பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்களுக்குஅந்த பதவிகள் கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால் அந்தப் பதவிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துணை வட்டாட்சியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கு நிலுவையில் இருப்பதால் காஞ்சி மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்களுக்கு வட்டாட்சியர்களாக பதவி உயர்வு கொடுக்க முடியவில்லை என்பதை விளக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE