சுதந்திர தினம்: ஆக.15-ல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

By கி.கணேஷ்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் உள்ளிட்டவற்றை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: "சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வியாழக்கிழமை, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களைச் சார்ந்த பார்கள், எப்எல் 3-ல் உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 (ஏ) மற்றும் எப்எல் 3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் உள்ளிட்டவற்றை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE