காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.6.81 கோடியில் கட்டப்பட்ட ராஜாஜி சந்தையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கேற்றி சந்தையின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

கடந்த 1933ம் ஆண்டு ரயில்வே சாலையில் கட்டப்பட்டது காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை. மொத்தம் 90 ஆண்டுகள் இந்த சந்தை பயன்பாட்டில் இருந்தது. அதிலிருந்த பல்வேறு கடிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதற்கான பணிகள் 2022ம் ஆண்டு மே 20ம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடியே 81 லட்சம் மதிப்பில் 242 கடைகள் இந்தச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுப் புறத்தில் 66 கடைகளும், மத்திய பகுதியில் 182 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இந்தச் சந்தையைத் திறந்து வைத்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE