சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை இடையே மின்சார ரயில் பகுதி நேர ரத்து!

By எம்.சகாயராஜ்

சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்தில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வழியாக சூலூர்பேட்டை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரை மணி நேரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரயில் சேவையை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், புறநகர் ரயில் நிலையத்தில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (அக்டோபர் 10) மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 10, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE