14 மாவட்ட எஸ்பி-க்கள் உட்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

By KU BUREAU

சென்னை: 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், கரூர், சேலம், நாகை, திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான், கோவை மாவட்ட எஸ்.பி.யாக கார்த்திகேயன், பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பச்சேரா, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர். சீனிவாசன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ்கான்,
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கவுதம் கோயல், தூத்துக்குடி எஸ்பியாக உள்ள ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE