புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்... மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்!

By காமதேனு

தேனி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய போலீஸாரை கண்டித்து மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் மரக்கிளைகளின் மீது உரசி தீப்பொறி வெளிப்பட்டதால் சண்முகநாதன் மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அதேப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் லூக்காஸ் மற்றும் குமார், ‘நாங்கள் இருக்கும்போது மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக புகார் செய்வீர்களா?’ என கேட்டு சண்முகநாதனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த சண்முகநாதன் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சண்முகநாதனின் மனைவி துளசி மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது தென்கரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த மோதல் தொடர்பாக லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகம்

இந்நிலையில் போலீஸார் துளசியிடம், ‘இந்த விவகாரத்தில் உங்கள் உறவினர் பெயரிலும் வழக்குப்பதிவு செய்வோம்’ என்று மிரட்டும் விதமாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த துளசி இன்று காலை 10 மணி அளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன் தனது 13 வயது மகளுடன் மண்ணெண்ணெய்யை உடலில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு போலீஸாருக்கு தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி

அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!

இன்னும் முடியாத மீட்பு பணி... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE