தமிழக மீனவர்களுக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு

By KU BUREAU

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்கள் 10 பேருக்குகாவலை நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை கடற்படையினர், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன்என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த முத்துசெட்டி (70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35)மற்றும் வைத்தியநாதன் (45), வானவன்மாதேவி கலை முருகன்(25), கீச்சாங்குப்பம் கோவிந்தசாமி (60), கடலூர் மணி பாலன்(55), ஆந்திராவைச் சேர்ந்த கங்கால கொருமையா மற்றும் 2 மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபரஞ்சனி ஜெகநாதன், மீனவர்களின் காவலை 4-வது முறையாக ஆகஸ்ட் 12-ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE