மதுரையில் நெகிழ்ச்சி: உண்டியல் சேமிப்பை வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக வழங்கிய 4ஆம் வகுப்பு மாணவி

By என்.சன்னாசி

மதுரை: தீபாவளி பண்டிகைக்காக சேமித்து வைத்த உண்டியலை 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவியாக வழங்கினார்.

மதுரை திருநகர் 5ஆவது நிறுத்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துபாண்டி(37) - கார்த்திகா (37) தம்பதியினரின் மகள் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஜோதிகா. இவர் தீபாவளி பண்டிகையின்போது ஏழை எளியோருக்கு உதவி செய்ய சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தினை வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவிடம் இன்று வழங்கினார்.

கரோனா காலகட்டத்தில் இருந்து தனது 3 வயதில் இருந்தே மாணவி ஸ்ரீஜோதிகா உண்டியலில் சேமித்து வைக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உணவுகளை வழங்கி வந்ததோடு மாதம்தோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு பேனா பென்சில் ஆகியவற்றை வழங்கி வந்துள்ளது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE