வயநாடு நிலச்சரிவு: விசிக ரூ.15 லட்சம் நிதி

By KU BUREAU

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் நடந்துள்ள நிலச்சரிவுப் பேரிடரால் 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்த பெருந்துயர் நடந்துள்ளது. குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர்.

இப்பேரிடரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலி யுறுத்துகிறோம்.

இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE