காப்பகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து இரண்டு சிறுவர்கள் தப்பி ஓட்டம்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் 2 பேர் சுவர் ஏறி குதித்து தப்பினர். அவர்களை பூக்கடை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பூக்கடை நைனியப்பன் நாயக்கர் தெருவில் சிறுவர் காப்பகம் ஒன்று உள்ளது. இந்தக் காப்பகத்தில் பல சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு சிறுவர்கள் இன்று மாயமாகி விட்டனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது இரண்டு சிறுவர்களும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியது தெரிய வந்தது.

இது தொடர்பாக பூக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் ஒரு சிறுவன் எர்ணாவூரில் உள்ள அவனது வீட்டிற்கு சென்றது தெரிய வந்துள்ளது. மற்றொரு சிறுவனைத் தொடர்ந்து போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE