வயநாடு நிலச்சரிவில் ஈரோடு தாளவாடியை சேர்ந்த தம்பதி உயிரிழப்பு

By KU BUREAU

ஈரோடு: கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த, ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். அவர்களது மகனைத் தேடும்பணி நடைபெறுகிறது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள காமையன்புரம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, வயநாட்டில் உள்ள முண்டகை என்ற ஊரில், தனது குடும்பத்துடன் தங்கி, தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ரங்கசாமி, அவரது மனைவி புட்டுசித்தம்மா ஆகியோர் உயிரிழந்தனர். புட்டு சித்தம்மாவின் உடல் காமையன்புரத்துக்கு கொண்டு வரப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ரங்கசாமியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக வயநாடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவில் மாயமான அவர்களது வளர்ப்பு மகன் மகேஷை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE