செத்தாலும் இனி இதை செய்யமாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

By KU BUREAU

சென்னை: செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன். அதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று ஊடகவியலாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு நேற்று இரவு திடீரென பயணப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு குறித்து கட்சி தலைமையிடம் அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லிக்கு அவர் மீண்டும் நேற்று இரவு சென்றுள்ளார்.

இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில்," மாநிலத்தில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கட்சியின் தலைமைக்குத் தெரிவிப்பதற்காக டெல்லி செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், இங்கிலாந்து சென்று சர்வதேச அரசியல் படிப்பு படிக்க அனுமதி பெறுவதற்காக அண்ணாமலை டெல்லி சென்றிருக்கலாம்" என்று கூறினர். இந்நிலையில், திடீரென டெல்லி செல்வது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர், "செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன். அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்" என்று கூறினார்.

கடந்த ஜூன் மாதம் டெல்லி செல்லும் முன் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது," இனிமேல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு இன்று செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE