சாலை அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி, பாஜக ஊடக பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினர். அந்த மனுவில், “பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இ.பி.காலனி ஆனந்த் நகர் 2-வது தெருவில், சாலை அமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஏற்கெனவே பிள்ளையார் கோயில் தெரு - சவுந்திரராஜன் வீட்டுத் தெரு ஆகியவற்றை இணைக்கும் சாலை, ஆனந்த் நகர் சாலை உள்ளிட்டவற்றை அமைக்க ஏற்பாடு செய்த நிலையில், அதனை திடீரென நிறுத்திவிட்டனர். எனவே, இந்த சாலைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE