திருப்பத்தூர் அருகே அரசு குளிர்சாதன பேருந்து மரத்தில் மோதி விபத்து: 6 பேர் காயம் 

By KU BUREAU

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஸ்டியரிங் பழுதால் அரசு குளிர்சாதன பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அரசு குளிர்சாதன பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி என்ற இடத்தில் உள்ள வளைவு ஒன்றில் பேருந்து வளைந்த போது அதன் ஸ்டியரிங் பழுதானது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 4 பயணிகள் என 6 பேர் காயமடைந்தனர். அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்குறித்து திருப்பத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE