நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 27-ம் தேதி (நாளை)நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பது என்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதே பொருத்தமாக இருக்கும். இதைவிடுத்து, கூட்டத்தை புறக்கணிப்பது தவறான நடவடிக்கையாகும்.

எனவே, பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE