ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முன்ஜாமீன் கோரி மனு: அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

By KU BUREAU

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான திமுக முன்னாள்நிர்வாகியான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைசட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தங்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டுமெனக் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு மற்றும்சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், இந்த வழக்கில் உள்நோக்கத்துடன் அரசியல் சாயம்பூச அமலாக்கத் துறை நினைக்கிறது என்றார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச நினைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரானஜாபர் சாதிக்கே கூறவில்லை. .

போதை பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அதையேற்ற நீதிபதி, இந்தமுன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29 க்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE