அறநிலையத் துறை ஆணையர் பொறுப்பேற்பு

By KU BUREAU

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பி.என்.ஸ்ரீதர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத் துறைசெய்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த பி.என்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத் துறையின் 52-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த க.வீ.முரளிதரன் சமூக பாதுகாப்புஇயக்குநராக நியமிக்கப்பட்டுள் ளார். இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பி.என்.தர் பொறுப் பேற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE