கோயில் சொத்துகளை பாதுகாக்க கோரி தமிழகம் முழுவதும் நாளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள், இடங்கள், வீடுகள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை அரசே கபளீகரம் செய்துள்ளது. அதுமட்டுமல்ல கோயில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடோ வாடகையோ கூட தருவதில்லை.

இந்து கோயில்களின் சொத்துகளை அரசே திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல்போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர்.

பிரம்மாண்டமான கோயிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள் அதனை நிர்வகிக்க, பாதுகாக்க பல கோடி பெறுமானமுள்ள சொத்துகளை இறைவன் பேரில் எழுதி வைத்துள்ளனர். நீதிமன்றமும் கோயில் சொத்துகள் கோயில் பயன்பாட்டுக்காக தான். அதனைவேறு உபயோகத்துக்கு பயன்படுத்துவது கூடாது என கூறியேவந்துள்ளது.

எனவே கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறும் ந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துகளை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, கோயில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றினைத்து வருகின்ஜூலை 21-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE