போதை பொருள் கடத்தலை தடுக்க காவல் ஆணையருடன் கடற்படை அதிகாரி ஆலோசனை

By KU BUREAU

சென்னை: கடலோர பாதுகாப்பு மண்டல (கிழக்கு) ஐஜி,கமாண்டர் டானி மைக்கேல், சென்னை காவல் ஆணையர் அருணை நேற்று சந்தித்தார்.

அப்போது, கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது, கடலில் மீட்பு பணிகளை மேற்கொள்வது, நுண்ணறிவுத் தகவல்களை பகிர்வது உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதை உறுதி செய்யும் வகையில் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்வதற்கு ஏற்றவாறு, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும்கலந்துரையாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE