ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத் ஜூலை 20-ல் சென்னை வருகை

By KU BUREAU

சென்னை: ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத் ஜூலை 20-ம் தேதி சென்னை வருகை தரவுள்ளார். இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென் பாரத ஊடக பிரிவு செயலாளர்ஸ்ரீராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனது ஆண்டு பயணத் திட்டத்தின்படி, ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத் ஜூலை 20-ம் தேதி சென்னை வருகிறார். மறுநாள் அவர் குருபூஜை விழாவில்பங்கேற்கிறார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ்நிர்வாகிகள் காவிக் கொடிக்கு பூஜை செய்வர். இது ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான தனிப்பட்ட நிகழ்ச்சி. அதேநாள் மாலை, சின்மயா மிஷன் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளின்போது பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE