தொலைதூரக்கல்வி படிப்பு: ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

By லிஸ்பன் குமார்

சென்னை: தொலைதூரப் படிப்புகளுக்கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜூலை 2024 பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும், தகுதியுடைய எஸ்சி- எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்' என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE