குறைத் தீர்க்கும் உதவி எண்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்!

By ஆனந்த விநாயகம்

தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கான உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என மாநகர போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில், 'மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த தலைமையகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் மற்றும் தகுதிச்சான்று பிரிவில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் பணி சார்ந்த குறைகளை அலுவலக நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை 94450 49057 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இறுதி வரை தொலைபேசி மூலம் பணியாளர்களிடமிருந்து குறைபாடுகள் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அனைத்து பணியாளர்களும் தங்களின் பணி சார்ந்த குறைகளை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மீண்டும் நினைவூட்டப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE