விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை; மாம்பழங்களை பிழிந்து கொண்டாடிய திமுகவினர்

By KU BUREAU

பொள்ளாச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை அடுத்து, பொள்ளாச்சியில் திமுகவினர் மாம்பழங்களை பிழிந்து, பட்டாசுகள் வெடித்து நூதன முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நகர்மன்ற தலைவர் சியாமளா தலைமையில் திரண்ட திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக உறுப்பினர்கள் சிலர் மாம்பழங்களை கைகளால் பிழிந்து, பாமக விமர்சித்து, நூதன முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE