சென்னை | 120 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

By KU BUREAU

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 120 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, சென்னையில் பணியாற்றிய காவல் ஆணையர்கள் தாம்பரம், ஆவடிஉட்பட பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் நடத்தைவிதி திரும்பபெற்றதையடுத்து போலீஸாரிட மிருந்துவிருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படியும், மேலும் சில காரணங்களை மையமாக வைத்தும்சென்னையில் நேற்று ஒரே நாளில்120 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பிறப்பித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE