விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளநிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் அமைக்கப்பட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் மற்றும்லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர்தொகுதிக்கான ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மகளிர் உரிமைத்தொகை, கல்விக்கடன், முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்து, அதில்உடனே நிறைவேற்றக்கூடியவற்றை நிறைவேற்றி தருகின்றனர்.
திமுக முதற்கட்ட பிரச்சாரத்தைதொகுதி முழுவதும் முடித்துவிட்டதுஎன்றே சொல்லலாம். இரண்டாம்கட்டமாக சட்டப்பேரவை கூட்டம்முடிந்த பின்னர் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க உள்ளனர்.
பாமக சார்பில் வழக்கறிஞர் பாலுதலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அதில் சிவகுமார்எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள்நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
10.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைத்தால் தான் வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் உரிய இடம் கிடைக்கும்என்ற முழக்கத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில்திண்ணை பிரச்சாரத்தை பாமகமேற்கொண்டு வருகிறது.
அதேபோல்சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது. இதில் 25 முதல் 30 சதவீத வாக்குகளை பெற்றாலே ஏறத்தாழ 60 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றுவிட முடியும் என்கின்றனர் அக்கட்சியினர்.
மேலும் திமுகவை எதிரியாக பார்க்கும் அதிமுக, தேமுதிகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும்என்று அன்புமணி ராமதாஸூம், பாமக வேட்பாளரை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும் என்று ராமதாஸூம் வேண்டுகோள் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களை சொல்லிமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாம்தமிழர் கட்சி சார்பில் திமுகவையும், பாஜகவையும் விமர்சித்து பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் அதிமுக, தேமுதிக வாக்குகளை பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
2016 தேர்தலில்... இந்த தொகுதியில் 2016 -ம்ஆண்டு திமுக, அதிமுக, பாமகஆகிய 3 கட்சிகளும் போட்டியிட்டன.
அதில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராதாமணி 63,757 வாக்குகளையும், அதிமுக 56,845 வாக்குகளையும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 41,428 வாக்குகளையும் பெற்றிருந்தனர். தனித்துப் போட்டியிட்ட பாமக மும்முனை போட்டி நிலவிய போது 23 சதவீத வாக்குகளை பெற்றது.
இதன்பிறகு 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,776 வாக்குகளையும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகளையும் பெற்றனர். தொடர்ந்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வேட்பாளர் 84,157 வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஷ்மி 8,216 வாக்குகளையும் பெற்றார்.
இச்சூழலில் பாமக தனது வாக்குகளுடன் அதிமுக, தேமுதிகவின் வாக்குகளும் கிடைத்தால் திமுகவிடமிருந்து வெற்றியை தட்டிப் பறித்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளது. திமுக,பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
லைஃப்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
லைஃப்
9 hours ago