ஸ்ரீரங்கம் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தரிசனம்

By KU BUREAU

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் நேற்று தரிசனம் செய்தார்.

திருச்சியில் நடைபெற்று வரும்ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பங்கேற்க, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் திருச்சிக்கு மே 14-ம் தேதி வந்தார்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று சென்றமோகன் பாகவத், ரங்கநாதர், தாயார் ரங்கநாச்சியார், தன்வந்திரி, சக்கரத்தாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, மோகன் பாகவத்துக்கு `ரங்கா, ரங்கா' கோபுரம் முன்பு கோயில் மணியக்காரர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அவரது வருகையொட்டி, கோயிலுக்குள் ஒரு மணிநேரத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE