காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் @ கும்பகோணம்

கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதி செய்யாமல் ஒழுங்காற்றுக் கூட்டத்தை ஒத்திவைத்து காலம் கடத்தி வரும் காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தாவின் நடவடிக்கைகளை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீரை உடனே பெற்றுத்தர வேண்டும்

நிகழாண்டு ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கமிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.செந்தில்குமார், டி.ஆர்.குமரப்பா, ஏ.ராஜேந்திரன், ஏ.எம்.ராமலிங்கம், ஏ.ராதாகிருஷ்ணன், சி.சின்னத்துரை, ஜி.கல்யாண சுந்தரம், குரு.சிவா, எம்.புகழேந்தி, எஸ்.கண்ணழகன் ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஸ்பெஷல்

6 hours ago

மேலும்