அரியலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜா நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனித் தெரு மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அப்படியே குடிநீர் வழங்கினாலும், அது கலங்கலாக வருவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் காவல் துறையினர், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE