காங்கிரஸுடனான கூட்டணிக்காக தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிப்பதா? - முதல்வருக்கு அண்ணாமலை கண்டனம்

By KU BUREAU

சென்னை: கூட்டணிக்காக தமிழக விவசாயிகள்நலனை புறக்கணிப்பதை முதல்வர்நிறுத்த வேண்டும் என தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனதுஎக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

காவிரி நீரில், கடந்த ஆண்டுகிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டுக்கு177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்கவேண்டிய தமிழகம், அதில் பாதியை கூட பெறவில்லை என்பது, திமுகஅரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. திமுக - காங்கிரஸ் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த ஆண்டு ஜூன் 12 அன்று,மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்றுகூறிவிட்டு, வயலில் கான்கிரீட்சாலை அமைத்து நடக்கும் முதல்வருக்கு, விவசாயிகள் வேதனை எப்படி புரியும்?

தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

விளம்பரத்துக்காக முப்பெரும் விழா: அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், ‘‘கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும்விழா நடக்க உள்ளது. மின்கட்டண உயர்வால் குறு, சிறுதொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. கோவையில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், முப்பெரும் விழா தேவையா? வீண் விளம்பரத்துக்காக நடத்தப்படும் இந்த விழாவால், மக்களுக்கு எந்தப்பலனும் இல்லை’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE