கோடை மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக உயர்வு

By KU BUREAU

தருமபுரி: கோடை மழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில், இன்று (17-ம் தேதி) காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சற்றே உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE