சம்பந்தர் முதல் விஜயகாந்த் வரை...

By காமதேனு

சம்பந்தர் முதல் விஜயகாந்த் வரை...

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சீர்காழியில் உள்ள திருத்தாளமுடையார்-ஓசைநாயகியம்மன் திருக்கோயிலில் வழிபாடு நடத்தி அங்கு வழங்கப்பட்ட தேன் பிரசாதத்தை அருந்தினார். பேச்சு வரத் தாமதமாகும் குழந்தைகளின் நாக்கில் இந்தத் தேனைத் தடவினால் பேச்சு வந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருஞானசம்பந்தருக்கு பொன்னால் ஆன கைத்தாளம் வழங்கியவர் இந்தத் திருத்தாளமுடையார். அந்தத் தாளத்துக்கு ஓசைவழங்கியவர் ஓசைநாயகியம்மன் என்பதுதான் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தின் குரல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக சிகிச்சைக்குப் பிறகேனும், ‘மக்களே’ என்ற விஜயகாந்த்தின் கர்ஜனை ஓங்கி ஒலிக்கட்டும்.

மரணத்திலும் மறுக்கப்பட்ட கண்ணியம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE