உயிர் காத்த முதல்வர் வாகனம்

By காமதேனு

முதல்வர்களுடன் நீண்ட வரிசையில் பயணிக்கும் பாதுகாப்பு வாகனங்களால் பொதுமக்களும் பயனடைய முடியும் என்று உணர்த்தியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி.

கடந்த வாரம் ஒரு ஷேர் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். அப்போது அந்தப் பக்கமாக வந்த நாராயணசாமி கீழே இறங்கி ஓடிவந்து பார்த்தவர் கையோடு, தனது பாதுகாப்பு வாகனத்தில் அவர்கள் ஐவரையும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காலத்தே செய்த உதவிக்காக சுற்றியிருந்த மக்கள் முதல்வரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE