தொலைவுக்குத் துரத்தப்படும் மாணவர்கள்

By காமதேனு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அருகில் இருக்கும் சட்டக் கல்லூரியை இடம் மாற்றும் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடிவருகின்றனர். 2008-ல் உயர்நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரியில் பெரும் வன்முறை சம்பவம் நடந்தது.

இதை விசாரித்த நீதிபதி பி.ஷண்முகம் குழுவின் பரிந்துரைப்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்களுக்கு சட்டக் கல்லூரி மாற்றப்பட இருக்கிறது. உயர் நீதிமன்றத்திலிருந்து தொலைதூரத்தில் கல்லூரியை மாற்றுவதன் மூலமாக மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது  என்று மாணவர்கள் போராடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE