இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னிலும், விராட் கோலி 56 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 26 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும், குல்தீப் யாதவ் 2 ரன்னிலும், ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 35 ரன்னில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 49.4 ஓவர்களில் இந்திய அணி 286 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேயா வீரர் கிளைன் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 2, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.