பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஓசூர் மாணவிக்கு பாராட்டு!

By KU BUREAU

ஓசூர்: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மாணவி நித்யஸ்ரீக்கு, முனீஸ்வர் நகரில் பாராட்டு விழா நடந்தது.

ஓசூர் முனீஸ்வர் நகரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நித்யஸ்ரீ (19). உயரம் குறைவான மாற்றுத் திறனாளியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், பேட்மிண்டன் வீராங்கனையான நித்ய ஸ்ரீ, பாரிஸில் நடந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்று ஓசூர் திரும்பிய அவருக்கு முனீஸ்வர் நகர் மற்றும் பல்வேறு பகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் மாணவியை பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE