பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார் ரூபினா

By KU BUREAU

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் நேற்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா 211.1 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஈரானின் சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். துருக்கியின் ஐசென் ஓஸ்கல் (231.1) வெள்ளி வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE