தென்னாப்பிரிக்காவுடன் மோதல்- மீளுமா வங்கதேசம்!

By காமதேனு

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏற்கெனவே நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் 1ல் தோல்வியை தழுவியுள்ள தென்னாப்பிரிக்கா, மற்ற 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை துவம்சம் செய்தது. ஆனால், நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. அதனால், இன்றைய போட்டியில் அந்த அணி வீரர்கள் வங்கதேசத்தை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதோடு, அதிரடியாக ரன் குவித்து வெற்றி பெறவே திட்டமிட்டு களமிறங்க உள்ளன.

அதேநேரம் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள வங்கதேச அணி வெற்றி பெற்று மீளும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE